காஷ்மீர் பிரச்சனை; உள்நாட்டு விவகாரம் – மாலத்தீவு

காஷ்மீர் பிரச்சனை; உள்நாட்டு விவகாரம் – மாலத்தீவு

மாலத்தீவு:

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது அந்நாட்டின் உள் விஷயமாக மாலத்தீவுகள் கருதுகிறது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்துள்ளது குறித்து மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு தொடர்பாக இந்திய அரசு எடுத்த முடிவு உள் விஷயமாக மாலத்தீவுகள் கருதுகின்றன. ஒவ்வொரு இறையாண்மையும் தங்கள் சட்டங்களை தேவைக்கேற்ப திருத்துவது உரிமை என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்