புதுடெல்லி:
ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி எனக்கும் வேண்டாம் என அதிமுக எம்பி., மைத்ரேயன் பேசியுள்ளார்.
மாநிலங்களவில் தனது இறுதி உரையின்போது, மைத்ரேயன் பேசுகையில், இலங்கையில் அப்பாவி ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு மாநிலங்களவையில் கண்டனங்களோ, மவுன அஞ்சலியோ செலுத்தப்படாதது என் மனதில் நீங்கா வடுகாக இருப்பதால், என் மறைவுக்கு பின்னும் மவுன அஞ்சலி செலுத்த வேண்டாம் என கண்ணீர் மல்க அவர் தெரிவித்துள்ளார்.