ஆட்சி அமைக்க பா.ஜ.,வுக்கு அழைப்பு

ஆட்சி அமைக்க பா.ஜ.,வுக்கு அழைப்பு

மும்பை:

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ்க்கு அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் சிவசேனா கூட்டணி அமைத்து பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 288 இடங்களில் 105 இடங்களை பா.ஜ., கைப்பற்றியது. ஆனால், இரு கட்சிகளிடையே முதல்வர் பதவி யாருக்கு என கடந்த சில நாட்களாக இழுபறி நீடித்துள்ளது.

இந்நிலையில், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பா.ஜ.வின் தேவேந்திர பட்னாவிஸ்சை ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். வரும் 11ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் கெடு விடுத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்