மும்பை:
மகாராஷ்டிர மாநில முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்றுக்கொண்டார்.
மும்பை தாதர் சிவாஜி பூங்கா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்ரேவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதனைத்தொடர்ந்து, அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.
இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.