திராவிட கட்சிகளால் கலையிழந்த இந்து மதத்தின் சாம்ராஜ்யம்

திராவிட கட்சிகளால் கலையிழந்த இந்து மதத்தின் சாம்ராஜ்யம்

சென்னை:
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்து கொண்ட சம்பவம் தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரலாற்றுமிக்கவை ஆகும்.

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி சென்னைக்கு வருவதற்கு முன்பாக மாமல்லபுரம் உலகம் முழுவதும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் 2 நாட்கள் மாமல்லபுரத்தில் இருந்து பல்வேறு சிற்பங்களை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அப்போது மாமல்லபுரம், கடற்கரை கோயில் மின்னொளியில் ஜொலித்தது.

இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உலகம் முழுவதும் பேசப்பட்டது.

இதற்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சிகள் மாமல்லபுரத்தை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தன.

பாஜக ஆட்சியில் மாமல்லபுரம் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. தமிழர்களின் நாகரீகம் உலகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக பல்லவ மன்னர்களின் சிற்பக்கலை திகழ்கிறது.

தமிழ் தமிழ் என்று பேசும் சில அரசியல் கட்சிகள் எப்போதாவது மாமல்லபுரத்தில் உள்ள புராதண சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார்களா என்றால் எதுவும் இல்லை.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் தற்போது இந்துக்களின் பாரம்பரியம் மிக்க கோவில்கள் புத்துயிர் பெற்று வருகிறது என்று சொல்லலாம்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்