எர்ணாகுளம்:
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மஹா புயலின் தாக்கத்தால் கேரளாவின் செல்லனம், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
வீடுகளிலும் தெருக்களிலும் கடல்போல் நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.