நீரில் மூழ்கி சாகசம்..! காணாமல்போன மேஜிக் மேன்..!!

நீரில் மூழ்கி சாகசம்..! காணாமல்போன மேஜிக் மேன்..!!

கொல்கத்தா:

கொல்கத்தாவில் நீரில் மூழ்கி மேஜிக் செய்த நபர் கங்கையில் காணாமல்போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் சான்சால் என்ற மேஜிக் மேன் ஹாரி ஹவுடினி, கைகால்களை கட்டிக்கொண்டு மில்லேனியம் பூங்காவிலிருந்த ஆற்றின் உள்ளே மெதுவாக இறக்கினார்கள். ஹௌரா பாலத்தின் 29வது தூண் அருகில் அவர் காணாமல் சென்றுவிட்டார்.

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல் துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினரும் தேடியதில் அவர் கிடைக்கவில்லை. இரவு வேலை என்பதால் தேடுதல் பணியை மேற்கொள்ள முடியவில்லை.

மேஜிக் மேன் ஹாரி ஹவுடினி, கைகள் மற்றும் காலையும் கட்டியபடி கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டார். அவரே தன் கட்டுகளை நீக்கி பெட்டியிலிருந்து வெளியே வருவதாக இருந்தது.

ஆனால் மேஜிக் மேன் வெளியே வரவே இல்லை. 4 நீச்சல் வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடியும் கிடைக்காததால் காவல்துறை மேஜிக் மேன் நீரில் மூழ்கி விட்டதாக அறிவித்தனர். ஆற்றில் மேஜிக் செய்ய யார் அனுமதித்தது என்பது குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்