மதுரையில் வீடுபுகுந்து இளைஞர் வெட்டிக்கொலை!

மதுரையில் வீடுபுகுந்து இளைஞர் வெட்டிக்கொலை!

மதுரை:

மதுரை அருகே இளைஞரின் வீட்டினுள் புகுந்து மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகே உள்ள சமயநல்லூரில் டபேதார் சந்தை பகுதியை சேர்ந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. இவர் அப்பகுதியில் சுண்ணாம்பு பவுடர் ஆலையை நடத்திவருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை நிருபன் சக்கரவர்த்தி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீடு புகுந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை சரமாரியாக வெட்டிசாய்த்துவிட்டு தப்பிச்சென்றது. சம்பவ இடத்திலேயே நிருபன் சக்கரவர்த்தி உயிரிழந்தார். அவரது மனைவி பிரேமாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்