பழனி கோவில் கடைகள் ஏலத்திற்கு தடை!

பழனி கோவில் கடைகள் ஏலத்திற்கு தடை!

பழனி:

பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான கடைகளை ஏலம் விட உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

பழனி கோவில் கடைகளின் வாடகைதாரர்களான சுரேஷ் பாபு, லட்சுமணன் உள்ளிட்ட 61 கடை உரிமையாளர்கள் சார்பில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தங்களது கடைகளை, ஏலம் விடுவதற்கு தடை கோரிய இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், பழனி கோவிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விடுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி நீதிபதி வைத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்