மகளுக்கே பாலியல் கொடுமை..! பைனான்சியர் கொலையில் திடீர் திருப்பம்..!!

மகளுக்கே பாலியல் கொடுமை..! பைனான்சியர் கொலையில் திடீர் திருப்பம்..!!

அலங்காநல்லூர்:

பைனான்சியர் கொலையில், மகளையே பாலியல் தொந்தரவு கொடுத்ததால், அவரது 2வது மனைவியே கூலிப்படையை வைத்து கொன்றது அம்பலமாகியுள்ளது.

மதுரை அடுத்த அலங்காநல்லூர் நடராஜ்நகரைச் சேர்ந்தவர் பைனான்சியர் இளங்கோவன். இவர் கடந்த வெள்ளியன்று தனது வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 2வது மனைவிஅபிராமியே கூலிப்படையை ஏவி கொலை செய்தது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடந்த விசாரணையில், தன்னுடைய மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துவந்ததால் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை கைதுசெய்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கூலிப்படையை சேர்ந்த 5 பேரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்