மதுரை:
மதுரை மத்திய சிறையில் சிறை காவலர்கள் மற்றும் காவல் துறையினரும் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி தலைமையில், கைதிகளின் அறைகளில் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது.
ஆண்கள் சிறையை அடுத்து, பெண்கள் தனி சிறையிலும் பெண் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை.