விஜய் டிவி பொய் புகார்; மதுமிதா அதிரடி

  • In Cinema
  • August 22, 2019
  • 241 Views
விஜய் டிவி பொய் புகார்; மதுமிதா அதிரடி

சென்னை:

அதிக சம்பளம் கேட்டு மிரட்டியதாக விஜய் டிவி நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளது என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

‘பிக்பாஸ் 3’யில் கலந்துகொண்ட நடிகை மதுமிதா, கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தற்கொலை முயற்சி செய்ததாக அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

போட்டியிலிருந்து வெளியேறிய மதுமிதா, பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்கில் காவிரி பிரச்சனை தொடர்பாக கருத்து கூறியதுதான் பிரச்சனை என தெரிவித்திருந்தார். அதனால் தான் அவர் கையை அறுத்துக்கொண்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மதுமிதா அதிக சம்பளம் கேட்டு தங்களுக்கு டார்ச்சர் கொடுப்பதாகவும், தற்கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் இந்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் நடிகை மதுமிதா அளித்த பேட்டியில், விஜய் டிவி நிர்வாகம் என் மேல் பொய் புகார் அளித்துள்ளது. இதற்கு மேலும் நான் அமைதியாக இருந்தால் என் பெயர் கெட்டுவிடும் என்பதால் தெளிவுபடுத்துகிறேன்.

விஜய் டிவியை எப்போது நான் மிரட்டவில்லை. என் மீது புகார் கொடுத்தற்குபின் விஜய் டிவியை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. சினமாத்துறையில் இதுவரை என் மீது எந்த புகாரும் வரவில்லை.

இன்றுவரை விஜய் டிவி வகுத்த வழிமுறைப்படியே நடக்கிறேன். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனும் தலையிட்டு இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து வைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என அவர் தெரிவித்தார்.

மேலும், இதுவரை நான் வெளியில் சென்று மருத்துவம் பார்க்கவில்லை. நிகழ்ச்சிக் குழு அனுமதித்த மருத்துவர்தான் எனக்கு மருத்துவம் பார்த்து வருகிறார் எனவும் அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்