‘‘தோனி வந்தாலே எதிரணிக்கு பயம்’’ -நியூசிலாந்து வீரர் மெக்கல்லம்..!

  • In Sports
  • May 20, 2019
  • 217 Views
‘‘தோனி வந்தாலே எதிரணிக்கு பயம்’’ -நியூசிலாந்து வீரர் மெக்கல்லம்..!

சென்னை:

தோனி களத்திற்கு வந்தாலே எதிர் அணியினருக்கு ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தும் என நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இதன் முதல் போட்டியாக இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளிடையே லண்டனில் நடக்கிறது. இந்திய அணி ஜூன் 6ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.

இதற்கான பயிற்சியில் அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அப்போது நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் தோனி குறித்து பேசியுள்ளனர்.

அதில், இந்திய அணிக்கு விலைமதிப்பற்ற வீரர் தோனி. எதிர்கொள்ளும் போட்டியை அவர் மனதில் புளூபிரின்ட்டை வைத்திருப்பார். அவர்களத்திற்கு வரும் போது, ஒருவிதமான பயத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கும் என தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்