தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் கண்டனம்!

தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் கண்டனம்!

சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் கால அவகாசம் கேட்ட தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனவும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் வரை அவகாசம் கேட்ட ஆணையத்திற்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாக அவர் கூறினார்.

மேலும், மாநில தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் ஒன்றாக இணைந்து அரசியல் சட்டத்தை மீறுகின்றன. தோல்வி உறுதி என்பதால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் அதிமுக அரசு தள்ளிப்போடுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்