கிளிநொச்சி:
இலங்கையில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் தோண்டி எடுக்கும் பணியில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் உள்ள கிளிநொச்சி, சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அகழ்வு பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி நீதிபதி சரவண ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் நடைபெற்றதில் அங்கு எந்தவித பொருட்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.