சேலம்:
சேலத்தில் காதல் ஜோடிகள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
சேலத்தை அடுத்த கருந்துறையை சேர்ந்த சரத்குமார், காங்கயம் பகுதியை சேர்ந்த வள்ளி என்பவரை திருப்பூரில் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இவர்களுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டு கருந்துறையில் குடியேறிய நிலையில், பெண் வீட்டார் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறி, இருவரும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு தரப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.