துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு காதல் ஜோடி மனு..!

துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு காதல் ஜோடி மனு..!

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசன்ஸ் கேட்டு மனு அளித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார் கோவிலை சேர்ந்த பிரவீன்குமார், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யாவை காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார்.

இதனால், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் அவர்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, சரண்யாவை ஆணவக்கொலை செய்ய சிலர் துடிப்பதாகக்கூறி, தங்களுக்கு பாதுகாப்பு கேட்டும், துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டும் அந்த காதல் தம்பதி மாவட்ட எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்