சென்னை:
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த லாஸ்லியாவின் தந்தை பாசத்துக்கு பதிலாக கடும் கோபமடைந்து அவரின் செயல்களுக்கு கடுமையாக எச்சரித்தார்.
‘பிக்பாஸ் 3’ யில் தற்போது பிரீஸ், பார்வர்டு, ரீவைன்ட் என பிக்பாஸ் ரிமோட் மூலம் போட்டியாளர்களை இயங்கி வருகின்றனர். இந்த நிகழ்வில் நேற்று முகேனின் தாய் மற்றும் தங்கை சந்தித்தனர்.
இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளாக தன்னுடைய தந்தைய பார்க்காத லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டுக்குள் தந்தையை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.
ஆனால், லாஸ்லியாவின் காதல் விவகாரம் தொடர்பாக அவர் கடும் கோபத்தில் இருப்தாக தெரிந்தது. ஏனென்றால், லாஸ்லியா கட்டிப்பிடித்து அழுதபோது, அவர் எந்தவித பாசத்தையும் வெளிப்படுத்தவில்லை.
பின்னர், உள்ளே சென்ற சிறிது நேரத்தில் லாஸ்லியாவின் தந்தை, அவரின் காதல் விவகாரம் தொடர்பாக, நான் உன்னை அப்படி வளர்த்தேன் எனவும், தலைகுனிஞ்சி வாழக்கூடாது; மத்தவங்க காரி துப்பக்கூடாது என கடுமையாக சாடினார். அருகில் கூடியிருந்த போட்டியாளர்களுடன் நின்ற கவினின் முகத்தில் அதிர்ச்சி தென்பட்டது.
Today's Promo3 HD Video
Losliya's dad angry with her💔💔
Watch & share your comments👍🏻#BiggBossTamil3 pic.twitter.com/EtO9wiV1on
— BiggBossTamil3 (@Biggboss_trolls) September 11, 2019