சென்னை:
சென்னையில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
லாரிகளுக்கு சரியான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக சென்னையில் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், வட்டாச்சியர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றனர்.