மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் லாரி விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அபாயோ மாகாணத்திலிருந்து கானார் நகருக்கு இரவு 7 மணிக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியில் அரசு உதவித்தொகையை பெற்றுக்கொண்டு விவசாயிகள் 50 பேர் தங்களது சொந்த கிராமங்களுக்கு சென்றுகொண்டடிருந்தனர்.
அப்போது அந்த சாலைகள் வழுக்கும் தன்னை கொண்டதால், எதிர்பாராதவிதமாக லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர்.