சென்னை:
சென்னை அருகே கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையை அடுத்த பாடி தாதங்குப்பம் பகுதியில் கண்டெய்னர் லாரி மீது, அரசு பஸ் மோதியதில் 3 பெண்கள் உளிட்ட 14 பேர் படுகாயமடைந்தனர். அதிகாலை 3 மணிக்கு ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சை டிரைவர் கோவிந்தசாமி என்பவர் ஓட்டிவந்தார்.
அப்போது கண்டெய்னர் லாரி மீது அந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், டிரைவரின் கால் நசுங்கியது. கண்டக்டர் வீரமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.