சிச்சுவான்:
தகவல் தொழில்புட்ப ஆய்வுக்கான புதிய செயற்கைகோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள ஜி-சாங் ஏவுதளத்திலிருந்து, ‘லாங் மார்ச்-3பி’ ராக்கெட் மூலம் ‘டிஜேஎஸ்டபுள்யூ 4’ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. நேற்றிரவு 11.21 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டபின், அதிவேக தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் என சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.