லோக்பால் அமைப்பின் இணையதளம் இன்று துவக்கம்..!

லோக்பால் அமைப்பின் இணையதளம் இன்று துவக்கம்..!

புதுடெல்லி:

அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு உயர் பதவியில் உள்ளவர்களின் ஊழல் புகார்களை விசாரிக்கும் வகையில் லோக்பால் அமைப்பு கடந்த 2014ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், லோக்பால் அமைப்பு உருவாக்காதநிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்க பிறகு, லோக்பால் அமைப்பை உருவாக்க முடிவுசெய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம், இந்த அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பினாகி சந்திரகோஷ் கொண்ட 8 உறுப்பினர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.

இந்நிலையில், லோக்பால் அமைப்பிற்கான இணையதளம் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இன்று நடந்த விழாவில், அமைப்பின் தலைவர் பி.சி.கோஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்