ஊரடங்கு விதி மீறல் !! இதுவரை ரூ.19.26 கோடி அபராதம் !! காவல் துறை

ஊரடங்கு விதி மீறல் !! இதுவரை ரூ.19.26 கோடி அபராதம் !! காவல் துறை

உலக நாடுகளின் பட்டியலில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது. அதிக பாதிப்புகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. நோய்த்தொற்றில் இருந்து மக்களை காப்பதற்கான அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

ஆனாலும் அதையும் மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஊரடங்கை மீறியதாக இதுவரை 9,22,070 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்தில் 2,884 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக 6,58,745 வாகனங்களும், 24 மணி நேரத்தில் 1,061 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.8,38,141 வழக்குகளும், 24 மணி நேரத்தில் 2,706 வழக்குகளும் பதிவாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.19.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்