மாவட்ட ஊராட்சி தலைவர்; அதிமுக 14; திமுக 12 வெற்றி

மாவட்ட ஊராட்சி தலைவர்; அதிமுக 14; திமுக 12 வெற்றி

சென்னை:

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் அதிமுக 14 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் அதிமுகவும் திமுகவும் சமமான உறுப்பினர்களை கொண்டிருந்ததால், தேர்தல் நடத்தப்படவில்லை. மீதமுள்ள 26 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக கூட்டணி 14 இடங்களிலும், திமுக 12 இடங்களிலுமம் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளன.

அதிமுக கைப்பற்றியுள்ள மாவட்ட ஊராட்சி:

கோவை, தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், அரியலூர்.

திமுக கைப்பற்றியுள்ள மாவட்ட ஊராட்சி:

மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி.

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக 149க்கும் மேற்பட்ட இடங்களையும், திமுக சுமார் 135 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்