சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது குறித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தபடவில்லை. இந்த காலதாமதத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தற்போது அதற்கான பணிகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வாக்குச்சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கலாம். இந்த பணிகள் ஜூலை இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.