பாலியல் வன்கொடுமை.. வாலிபருக்கு இரட்டை ஆயுள்

பாலியல் வன்கொடுமை.. வாலிபருக்கு இரட்டை ஆயுள்

கோவை:
கோவை மாவட்டம் மோத்தேபாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபர், 16 வயது சிறுமியை வாழைத் தோட்டத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், இன்று வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. தினேஷ்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய நீதிபதி போக்ஸோ பிரிவுக்கு ஒரு ஆயுள், கொலை செய்த குற்றத்திற்கு ஒரு ஆயுள் என இரட்டை தண்டனை விதித்தார்.

மேலும், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்