டிண்டோரி:
மத்திய பிரதேசத்தில் சுமார் 45 ஆண்டுகளாக கண்ணாடிகளை உணவுவாக சாப்பிடும் விநோத வழக்கறிஞரால் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், டிண்டோரி வசிப்பவர் தயாராம் சாகு. வழக்கறிஞராக பணியாற்றி வரும் அவர், கடந்த 40 முதல் 45 ஆண்டுகளாக கண்ணாடி துண்டுகளை உணவாக சாப்பிட்டு வருகிறார்.
#WATCH: Dayaram Sahu, a lawyer from Dindori has been eating glass since last 40-45 years, says,"it's an addiction for me. This habit has caused damage to my teeth. I wouldn't suggest others to follow as it's dangerous for health. I have reduced eating it now." #MadhyaPradesh pic.twitter.com/DRWXXb93qA
— ANI (@ANI) September 14, 2019
இதுகுறித்து தயாராம் சாகு கூறுகையில், இது எனக்கு ஒரு போதை எனவும், கண்ணாடிகளை சாப்பிடுவதால் என்னுடை பற்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் மற்றவர்கள் சாப்பிட பரிந்துரைக்க மாட்டேன் எனவும், தற்போது கண்ணாடி சாப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.