சூளகிரியில் கிருமிநாசினி சுரங்கத்தை தொடங்கி வைத்த ஒன்றியகுழு தலைவர்

சூளகிரியில் கிருமிநாசினி சுரங்கத்தை தொடங்கி வைத்த ஒன்றியகுழு தலைவர்

சூளகிரியில் காய்கறிகளை வாங்க வருபவர்கள் கொரோனா தொற்றை தவிர்க்க கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி ஊராட்சியின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்திருப்பதால், பொதுமக்கள் அதிகஅளவில் கூடுவதை தவிர்க்க தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

சூளகிரி சுற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக சூளகிரி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதால்

கொரோனா தொற்று பரவலை தடுக்க அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பேருந்து நிலையம் நுழைவில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை இன்று சூளகிரி ஒன்றியகுழு தலைவர் லாவண்யா அவர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள திறந்து வைத்தார்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்