அமராவதி:
ஆந்திர மாநிலத்தில் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று துவக்கி வைத்தார்.
சுயமாக ஆட்டோ மற்றும் டாக்சி வைத்துள்ள டிரைவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா’ திட்டத்தை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த ரூ.10,000 நிதி வாகனத்தின் காப்பீடு மற்றும் பராமரிப்பு செலவுக்காக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.