பாட்னா:
சாப்பாடு கூட போடாமல் கொடுமைப்படுத்துவதாக லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாவின் மனைவி ஐஸ்வர்யா ராய் பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் என்ற 2 மகன்கள் உள்ளனர். 7 மகள்களும் உள்ளனர்.
லாலு பிரசாத் யாதவ் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தேஜ்பிரதாப் யாதவுக்கு பீகார் எம்.எல்.ஏ சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
தற்போது தேஜ் பிரதாப் யாதவ் நீதிமன்றத்தில் தனக்கு கொடுக்குமாறு விவாகரத்து கோரியுள்ளார்.
விவாகரத்தில் தனக்கு மனப் பொருத்தம் இல்லை என்று கூறியுள்ளார். சொந்த வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவரது மனைவி ஐஸ்வர்யா ராய், மட்டும் லாலு பிரசாத் வீட்டிலேயே வசித்து வருகிறார்.
இதனையடுத்து அவர்கள் வீட்டில் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாக ஐஸ்வர்யா பரபரப்பான புகாரை கூறியுள்ளார்.
என்னுடைய கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் அவர் விவாகரத்து கோரியுள்ளார்.
தற்போது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் விவாகரத்து செய்துவிட்டது போன்று என்னை அவர் நடத்துகிறார்.
3 மாதங்களாக சாப்பாடு போடாமல் கொடுமை படுத்தி வருகின்றனர். நான் என்னுடைய அப்பா வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்து சாப்பிட்டு வருகிறேன்.
என்னுடைய மாமியார் மிகவும் கொடுமை படுத்துகிறார். என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டார் என்று கூறியுள்ளார்.
ஒரு முன்னாள் முதலமைச்சர் மருமகளை கொடுமை படுத்தும் செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.