லாலு பிரசாத்துகாக யாதவர்கள் அளித்து வந்த ஆதரவு சரிகிறதா?

லாலு பிரசாத்துகாக யாதவர்கள் அளித்து வந்த ஆதரவு சரிகிறதா?

பீகார்: கடந்த கால தேர்தலை போன்று யாதவர்களின் ஆதரவு லாலு பிரசாத் யாதவுக்கு கிடைக்குமா என்பது பீகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகிவிட்டது.

அரசியலில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கென்று சமூகத்து வாக்குகள் கணிசமாக இருக்கும். ஒரு வேட்பாளர் வெற்றி தோல்வி அடைய இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு ஜாதி அரசியல் இந்தியாவில் வேரூன்றி காணப்படுகிறது.

அந்த வகையில் பீகார் என எடுத்துக் கொண்டால் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியானது யாதவ சமூகத்துக்கு வாக்கு வங்கியை நம்பியே இருந்து வருகிறது. பீகாரில் மொத்தம் 14 சதவீதம் யாதவர்கள் உள்ளனர்.

லாலுவுக்கு ஆதரவு சவால்

அவர்கள் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் லாலு பிரசாத்துக்கு ஆதரவு அளித்து வந்தனர். அவர்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் மக்களின் ஆதரவும் ஆர்ஜேடிக்கு முக்கியத்துவத்தை அளித்து வந்தனர். எனினும் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதே சமூகத்தில் இளைஞர்களின் ஆதரவை கணிசமாக பாஜக பெற்றிருந்தது, அச்சமூகத்தையே தன் கட்டுக்குள் வைத்திருந்த லாலு பிரசாத் யாதவுக்கு பெரும் சவாலாக அமைந்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்