சென்னை:
‘லஷ்மன் ஸ்ருதி’ உரிமையாளர் ராமன் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையின், அசோக்நகர் சுப்பராயன் நகர் 7வது தெருவில், ‘லஷ்மன் ஸ்ருதி’ இசைக்குழுவின் உரிமையாளரர் ராமனின் வீடு உள்ளது. நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் ராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்த அசோக் நகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரதேச பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ராமனின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.