பெங்களூரு:
கர்நாடக பா.ஜ.வுடன் இணைந்து செயல்படுவதாக பரவிய செய்தி உண்மைக்கு புறம்பானது என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பா.ஜ.வுடன் கோர்க்கப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது ஆதறமற்ற, உண்மைக்கு புறம்பான செய்தி எனவும், கட்சித் எம்எல்ஏக்களும், தொண்டர்களும் இதற்கு செவிசாய்க்கத் தேவையில்லை எனவும், சமானியர்களுக்கான எங்கள் போராட்டம் தொடரும் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.