பெங்களூரு:
கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பேரவையில் முதல்வர் குமாரசாமி உருக்கமாக பேசிவருகிறார்.
நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்; தவறுகளை சரிசெய்யும் நேரம் இது.
பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்தபோது எடியூரப்பா முதல்வராக வழி கொடுத்தேன். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது நான் துரோகம் செய்யவில்லை.
அரசியலுக்கு வர ஆசை இல்லை என்றாலும் காலத்தின் கட்டாயத்தினால் அரசியலுக்குள் நுழைந்தேன் என்னுடைய ஆட்சியில் பங்கெடுத்து உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி என கர்நாடக பேரவையில் முதல்வர் குமாரசாமி உருக்கமாக பேசி வருகிறார்.