கூட்டணியில் பிளவு இல்லை

  • In Chennai
  • January 18, 2020
  • 235 Views
கூட்டணியில் பிளவு இல்லை

சென்னை:

திமுகவுடனான கூட்டணியில் பிளவு இல்லை என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப்பின் திமுகவுடனான கூட்டணியில் பிளவு இல்லை என அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கமல்ஹாசன் கூறியதைப்போல் எதுவும் நடக்கவில்லை எனவும், மதசார்பற்றவராக காட்டிக் கொள்ளும் கமல்ஹாசன் பாஜக ஆதரவாளர் ரஜினியின் உதவியை நாடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஆரோக்கியமான விவாதங்கள் செய்வது தவறு ஒன்றும் இல்லை என்றும், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் இரு கட்சி கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்