சென்னை:
திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை எனவும், திமுகவின் செயல் கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று வெளியிட்ட இந்த அறிக்கையால் திமுகவிலும் காங்கிரஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை எனவும், திமுக உடனான நட்பு எப்போது போல தொடர்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.