புதுடெல்லி:
கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கில் தூக்குத்தண்டனைக்கு எதிரான மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கோவை பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடபடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில், மனோகரன் தரப்பு வழக்கறிஞர், போலீஸ் காவலில், குற்றம் சாட்டப்பட்ட மனோகரன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவராக வாக்குமூலம் கொடுக்கவில்லை எனவும், போலீசாரின் கடும் தாக்குதலுக்கு பின்னரே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதை விசாரணை நீதிமன்ற நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை என வாதிட்டார்.