நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்

நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்

புதுச்சேரி:
தூய்மை இந்தியா திட்டப் பணிகள் மற்றும் ஏரி குளங்களை தூர் வாரும் பணிகளை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.

தூய்மை இந்தியா மற்றும் பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் நீர் ஆதாரத்தை பெருக்குவது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பாகூர் ஏரி பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கிரண்பேடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

புதுச்சேரியில் நீர் ஆதாரங்களை பாதுகாக்க, ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு வருகின்றன. அதே போன்று நீர் ஆதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்