புதுச்சேரி:
புதுச்சேரி அரசு நிர்வாக முடிவுகளில் தடையிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதனை எதிர்த்து கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றதில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் கூட உள்ளதால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடை விதிக்க வேண்டும்.இடைக்கால தடை விதிக்காவிட்டால் கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதற்கு இடைக்கால உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.