லண்டன்:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இங்கிலாந்து, அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அதில் முதல் கட்டமாக லண்டன் சென்றுள்ளார் முதலமைச்சர். அப்போது லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக அதன் நிர்வாகத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.