கடனுக்காக அப்பாவி கடத்தல்..! அ.ம.மு.க.,வினர் கைது.!

கடனுக்காக அப்பாவி கடத்தல்..!  அ.ம.மு.க.,வினர் கைது.!

சென்னை :

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் பல்கீஸ். இவரது மகன் ரஜிசேக் ஜான். வேளச்சேரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இவர் நேற்று முன்தினம் மாயமாகியுள்ளார்.

பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி பல்கீஸ், வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் அவர் கடன் தகராறில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. அ.ம.மு.க. நிர்வாகிகள் சிலரே கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வேளச்சேரி பகுதி அ.ம.மு.க. மாணவர் அணி செயலாளரான பாஸ்கர் என்பவரிடம், ரஜிசேக்ஜான் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை திருப்பிக் கொடுப்பதில் ரஜிசேக்ஜான் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், ரஜிசேக்ஜானை காரில் கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அவரை ஒரு வீட்டில் சிறை வைத்துள்ளனர்.

கடன் தொகையை கொடுக்கும்படி கடத்தல் கும்பல் சரமாரியாக உருட்டுக் கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த ரஜிசேக்ஜான் கடத்தல் கும்பலிடம் இருந்து மீள முடியாமல் சித்ரவதைக்குள்ளானார்.

மேலும், காரில் சிறை வைத்து 2 நாட்கள் காருக்குள்ளேயே அடைத்து வைத்து சித்ரவதை செய்து ரூ.5 லட்சம் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர்.

இதற்கிடையே அ.ம.மு.க. நிர்வாகியான பாஸ்கரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். ரஜிசேக்ஜான் அதிரடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் அ.ம.மு.க. நிர்வாகியான பாஸ்கர் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக அ.ம.மு.க. 178வது வட்ட செயலாளர் ஏழுமலையும் போலீசில் சிக்கினார். அவரையும் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தலில் சம்மந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்