சாலையில் விளையாடிய சிறுவனை கடத்திய பெண்.. சேலத்தில் பரபரப்பு.!

சாலையில் விளையாடிய சிறுவனை கடத்திய பெண்.. சேலத்தில் பரபரப்பு.!

சேலத்தில் சாலையில் விளையாடிய சிறுவனை கடத்திச் சென்றதாக பெண்ணை அப்பகுதி மக்கள் பிடித்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஜான்சன் நகரை சேர்ந்தவர் ஜஸ்டின் இவரது மகன் சரவணன் (4), வீட்டு வாசலில் தன்னுடைய சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் பெண் ஒருவர் சரவணனை அழைத்து சென்றுள்ளார். இதனிடையே விளையாடி கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என்று பெற்றோர் தேடியுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் வீட்டிற்கு சற்று தூரத்தில் குழந்தையுடன் ஒரு பெண்ணை பொதுமக்கள் பிடித்து தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே போலீசார் விசாரித்ததில் அந்த பெண்ணின் பெயர் செல்வி என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்