மும்பபை:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தயாராகிவிட்டனர் என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணி கேப்டன் வீரட் கோலி அளித்த பேட்டியில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய பந்து வீச்சாளர்கள் தயாராகிவிட்டனர். இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தங்களது முழுத்திறமையை வெளிப்படுத்துவர் என தெரிவித்துள்ளார்.