ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த கேரள வாலிபர் பலி

ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த கேரள வாலிபர் பலி

ஆப்கானிஸ்தான்:
ணூடந்த 2017ம் ஆண்டு கேரளா மாநிலத்திலிருந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தனர். இந்த இயக்கத்திற்கு கல்லூரி மாணவர் முகமது முகாஷின் சென்றுள்ளார்.

திரிச்சூரில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்த மாணவர் வீட்டை விட்டு சென்று ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவு விசாரணையை முடுக்கி விட்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் முகமது முகாஷின் உயிரிழந்தான் என்று தெரியவந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்