கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.

தற்போது 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சிரக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தொடர்மழை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த அச்சத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து 4 மாவட்டங்களில் அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்