திருவனந்தபுரம்:
கேரளாவில் பட்டப்பகலில் பெண் போலீஸ் ஒருவரை எரித்துக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், மாவேலிக்கரா மாவட்டத்தின் வல்லிகுன்னம் போலீஸ் ஸ்டேசனில் காவலராக பணியாற்றி வந்த பெண் ஒருவர், இன்று மதியம் பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பிகொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்து வந்த ஒருவர் தீடிரென அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். பெண் போலீஸ் தீயில் கருகி அதே இடத்திலேயே உயிரிழந்தார். தீயிட்டு கொளுத்திய நபரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பெண் போலீசின் கணவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.