மலப்புரம்:
கேரளாவில் உள்ள கவலப்பராவில் ஏற்பட்ட நிலச்சரிவிலிருந்து 25 உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். மேலும், 50 பேர் புதையுண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் உள்ள காவலப்பராவில் கடந்த 9ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 30 குடும்பங்கள் சிக்கியது. தகவலறிந்த மீட்புக் குழுவினரின் தொடர் தேடுதலில், தற்போது 25 உடல்களை மீட்டுள்ளனர். மேலும், 50 பேர் புதையுண்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.