‘‘முகாம்களில் 22 ஆயிரம் பேர்’’- பிணராயி விஜயன்

‘‘முகாம்களில் 22 ஆயிரம் பேர்’’- பிணராயி விஜயன்

திருவனந்தபுரம்:

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பிணராயி விஜயன் கூறுகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் 315 முகாம்களில் சுமார் 22 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதில் வயநாடு பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம். மாநிலம் முழுவதும் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். மழையின் தீவிரம் நாளை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், ஆகஸ்ட் 15ம் தேதி வரை மழையின் பாதிப்பு இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்