கெலவரப்பள்ளி அணையிலிருந்து நீர் வெளியேற்றம்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து நீர் வெளியேற்றம்

ஒசூர்:

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக 4 மதகுகள் வழியாக 728 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த சில தினங்களாக நீரின் வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தென்பெண்ணை அறு நீர் பிடிப்பு பகுத்கிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருவதால். இதன் காரணமாக ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியில், தற்போது 41.66 அடிநீர் சேமிக்கப்பட்டுள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 488கன அடி தண்ணீர் வந்த நிலையில், தற்போது 240 கன அடியாக அதிகரித்து அணைக்கு வினாடிக்கு 728 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருகிறது.

அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 4 மதகுகளின் வழியாக 728 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதிகரிக்கும் பட்சத்தில், வரத்து நீரை அப்படியே ஆற்றில் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்